Friday 17th of May 2024 01:54:24 AM GMT

LANGUAGE - TAMIL
-
சென்னை அணியின் தலைவர் பொறுப்பு மீண்டும் தோனிக்கு!

சென்னை அணியின் தலைவர் பொறுப்பு மீண்டும் தோனிக்கு!


சென்னை அணியின் தலைவர் பொறுப்பை மீண்டும் தோனியிடமே வழங்க ரவீந்திர ஜடேஜா முடிவு செய்துள்ளார்.

ஐபிஎல் 2022 போட்டியில் CSK அணியின் புதிய தலைவராக ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஐபிஎல் போட்டி தொடங்கியது முதல் (2 சீசன்கள் தவிர) சிஎஸ்கேவின் தலைவராக 12 சீசன்கள் அணியை சிறப்பாக வழி நடத்தி வந்த தோனி நடப்பு ஐபிஎல் சீசனில் அந்த பொறுப்பை ஆல்-ரவுண்டா் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார்.

ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ஜடேஜா தலைமையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறவில்லை. சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களிலும் 6-ல் தோற்று புள்ளிகள் பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. இதனால் புதிய தலைவர் ஜடேஜா மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் சென்னை அணியின் தலைவர் பொறுப்பை மீண்டும் தோனியிடமே வழங்க ரவீந்திர ஜடேஜா முடிவு செய்துள்ளார். ஒரு வீரராக சிறப்பான பங்களிப்பை வழங்கும் பொருட்டு இம்முடிவை எடுத்துள்ளதாக ஜடேஜா தெரிவித்துள்ளார்.

ஜடேஜாவின் இந்த முடிவை ஏற்று சிஎஸ்கே அணியின் தலைவராக மீண்டும் தொடர தோனி சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தோனி தலைமையில் கடந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றிருந்தது சிஸ்கே அணி என்பது குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE